ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேங்கை படத்துக்குப்பிறகு தமன்னாவை தமிழ் சினிமா நிராகரித்து விட்டது. என்றாலும் தெலுங்கு, இந்தி என தற்போது நடித்து வருபவருக்கு, தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு ரசிகர்களையும் மறக்க முடியவில்லையாம். எத்தனை மொழிகளில் நடித்தாலும் தமிழ் சினிமாவுக்கு ஈடு எதுவுமே இல்லை. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். என்றாலும், தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும்போது என்தாய் வீட்டுக்கு வருவது போன்ற உணர்வினை பெறுகிறேன். அந்த அளவுக்கு சென்னை வாசிகள் என்மீது அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லை என்றபோதும் அடிக்கடி எனது அபிமானத்துக்குரியவர்களை சென்னைக்கு வந்து பார்த்துவிட்டு செல்கிறேன் என்று ஏகத்துக்கு பில்டப் கொடுக்கிறார் தமன்னா.
அதோடு விட்டாரா, தமிழ் சினிமாவில் நான் பெரிதாக சாதித்ததாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் எதுவும் சாதித்ததாக நினைக்கவில்லை. மணிரத்னம், ஷங்கர் என்று முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்கவில்லை. ரஜினி, கமல் என்று பெரிய நடிகர்களுடன் டூயட் பாடவில்லை. இதுவெல்லாம் நடந்தால்தானே நான் சாதித்ததாக அர்த்தம் என்றும சொல்லும் தமன்னா, தான் விட்ட இடத்தை தொடர வேண்டும என்பதற்காக இப்படி பேசி வருகிறார். அவரது ஆத்மார்த்தமான சில இளவட்ட ஹீரோக்களும் அம்மணியின் உருக்கத்தில் மயங்கிப்போனவர்கள், அடுத்த ஆண்டு தமிழில் உனக்கு நல்ல எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது நம்பு என்று தமன்னாவை மீண்டும் அரவணைத்திருக்கிறார்களாம். ஆக, தன்னை வீழ்த்தி விட்டதாக மார்தட்டிய சில நடிகைகளைப்பார்த்து சீக்கிரமே கோதாவில் குதிப்பேன் என்று சொடக் போட்டு விட்டு மும்பைக்கு பறந்திருக்கிறார் தமன்னா.