ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டிரண்டு நடிகர்களாக போட்டி போடுவதுதான் வழக்கம். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற வரிசையில் தனுஷ் - சிம்பு என வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
தனுஷ் தன்னுடைய பாதையை தெளிவாகப் போட்டுக் கொண்டு ஹாலிவுட் வரை முன்னேறிவிட்டார். ஆனால், சிம்புவின் பாதை தடுமாற்றத்துடன் தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவந்த 'ஈஸ்வரன்' படம் கூட வசூலுக்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகத் தகவல்.
அப்படத்தில் தனுஷை உசுப்பேற்றும் வகையில், “ 'நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா' என சிம்பு வசனம் பேசியிருப்பார்.
தனுஷ் நடித்து 2019ல் வெளிவந்த 'அசுரன்' படம் தனுஷுக்கு நல்லதொரு பெயரைப் பெற்றுத் தந்தது. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். அப்படத்தைக் குறிப்பிட்டுத்தான் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு வசனம் பேசியிருப்பார் என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.
இந்நிலையில் தனுஷ் நேற்று தன்னுடைய டுவிட்டர் புரொபைலில் 'அசுரன்/நடிகர்' என தன் பயோ-வை மாற்றியுள்ளார். 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு பேசிய வசனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அவர் இப்படி மாற்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.