டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதேபோல்தான் கமல் இயக்கியுளள விஸ்வரூபம் படமும் உருவாகியுள்ளதாம். கதையோட்டம் வெவ்வேறு பாதைகள் என்றாலும் சேருமிடமும், கதையில் மையமும் ஒரே மாதிரியான தீர்வைத்தான பிரதிபலிக்கின்றனவாம். அதிலும், துப்பாக்கி படத்தில் 12 ஸ்லீப்பர்செல்களையும், 12 பேர் சென்று சுட்டு வீழ்த்துவது போன்றொரு காட்சியும் கமல் படத்தில் உள்ளதாம். அதனால் துப்பாக்கிப் படத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளாராம் கமல்.
இதனால் தற்போது மொத்த படத்தையும் முடித்து விட்ட அவர், அடுத்து என்ன செய்வதென்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேற மாதிரியான காட்சிகளை படமாக்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் 12 பேர் வெவ்வேறு இடங்களில் சென்றுதானே ஸ்லீப்பர்செல்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் விஸ்வரூபத்தில் நாம் ஒரே பஸ்சுக்குள் அத்தனை பேரையும சுட்டு வீழ்த்துவது போன்றுதானே படமாக்கியிருக்கிறோம். அதனால் காட்சியமைப்பு வேறு மாதிரியாகத்தானே இருக்கிறது என்று கமலின் டீமைச்சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம். அதனால் முதலில் தடுமாறிய கமல், இப்போது எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.