பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் மகேஷ்பாபுவுக்கு, அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள் தான் ஒக்கடு மற்று போக்கிரி. இதில் ஒக்கடு படம் வெளியாகி நேற்றுடன் 18 வருடங்கள் முடிவடைந்து விட்டது. குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்தப்படத்தை தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ தயாரித்திருந்தார். இந்தப்படம் தான் பின்னாளில் விஜய் நடிக்க 'கில்லி'யாக ரீமேக் ஆனது.
ஒக்கடு படத்தின் 18ஆம் வருட கொண்டாட்ட புகைப்படத்தை மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இது தயாரிப்பாளரை ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டது..
“தவறுகள் நிகழ்வது சகஜம் தான் பாபு.. 18ஆம் வருட கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது நம்ரதா என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.. ஆனாலும் அவரது பேவரைட் படம் இதுதான் என குறிப்பிட்டுள்ளாரே, அதுவே எனக்கு மகிழ்ச்சி தான்” என அதுகுறித்து வருத்தப்பட்டு பதிவிட்டிருந்தார் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ.
அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட நம்ரதா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார்.