விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
கடந்த 2019ல் வெளியான காளிதாஸ் படத்திற்கும் அதில் கதாநாயகனாக நடித்த பரத்தின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் இருக்கும் பரத், தற்போது 'யாக்கை திரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக சோனாக்சி சிங் ராவத் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் நடிக்கிறார்.
இக்லூ என்கிற படத்தை இயக்கிய பரத் மோகன் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜன-4ஆம் தேதியன்றே துவங்கியது. இந்தநிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா கிளம்பிசென்றுள்ள பரத், தான் கொல்கத்தா வந்தடைந்த விபரத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.