டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வி.இசட்.துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ள அரசியல் படம் நாற்காலி. சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற பாடலை மறைந்த 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இப்பாடலை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜன., 16) முதல்வர் பழனிசாமி வெளியிட, அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொள்கிறார்.
நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.இறுதிக்கட்ட பணிகள் முழுவேகத்துடன் நடக்கிறது. வரும் மார்ச் மாதம் திரையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.