ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்தது. இந்த டீசரில் யஷ் எந்திர துப்பாக்கியின் குழலில் சிகரெட் பற்ற வைத்து புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் யஷ் பொறுப்பான பணிகளை செய்கிறார். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது புதிய படமான கே.ஜி.எப்.2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் கட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஏனென்றால் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இது அவரது ரசிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் காட்சியை நீக்கினால் அது இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.