ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அம்மாவும் - மகனும் சேர்ந்த நடித்த செண்டிமெண்ட் நகை விளம்பரம் ஹிட் அடித்தாலும், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு அந்த தாயை "ஷோக"ப்படுத்தியிருக்கிறதாம். சங்கப் பிரச்சினைகளில் அப்பாபடும் அல்லல்கள் பற்றி மகன் கவலைப்படவே இல்லையாம். குறைந்தபட்சம் தனக்கு ஆதரவாக மகன் குரலாவது கொடுப்பான் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டாராம். அதுமட்டுமல்ல "இந்த ஆளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அவர் குணத்துக்கு நாலுபேரை அனுசரித்தெல்லாம் போக முடியாது. பேசாம வீட்டுல இருக்கச் சொல்லுங்க" என்று அப்பாவுக்கு வேண்டியவர்களிடம் மகன் சொன்னதுதான் இன்னும் வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறதாம். அதோடு "கன்" பட விஷயத்துல கட்டிங் போடுறதுக்காக அப்பா நடத்திய திருவிளையாடல்கள் எல்லாம் புலி தயாரிப்பாளர் மூலம் மகனக்கு தெரிய வர, அப்பா மீது ஏக கடுப்பில் இருக்கிறாராம் மகன். அப்பா செய்த தில்லுமுல்லுக்கு பரிகாரமாக மகனே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவி கன் சுடுவதற்கு ஏற்பாடு செய்தாராம். அம்மாவும் மகனும் மடியில் படுத்துக் கொண்டு பாசத்தை பொழிந்தாலும். அப்பாவும் மகனும் பேசி பல நாள் ஆச்சாம்.