Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி முடிவு - ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

13 ஜன, 2021 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Raghava-lawrence-request-to-Rajini-fans

அரசியல் கட்சி தொடங்கி, 2021 சட்டசபை தேர்தலை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவரோ, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தவர் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் அதை ஏற்காத ரசிகர்கள் பலர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ரஜினியின் நிலைபாடு குறித்து தற்போது நடிகர் ராகவா லாரன்சும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி என்னையும் பலர் அழைத்தனர். இப்போதும் ரஜினியின் முடிவை மாற்றுமாறு என்னைக் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

அதுகுறித்து தெளிவுபடுத்தவே இப்போது இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். அதாவது, ரஜினியின் முடிவினால் மற்ற ரசிகர்களுக்கு எத்தனை வலி உள்ளதோ அதே வலி எனக்கும் உள்ளது. இருப்பினும் ரஜினி அவர்கள் வேறு ஏதேனும் காரணம் சொல்லி அரசியல் கட்சி தொடங்காமல் பின்வாங்கினால் அவரை நானே வற்புறுத்தியிருப்பேன். ஆனால் அவரோ தனது உடல்நிலையை காரணமாக சொல்லி பின்வாங்கியிருக்கிறார்.

இந்த நேரத்தில், நாம் அவரது முடிவை மாற்றுமாறு வற்புறுத்தி, அவரும் முடிவை மாற்றிக்கொண்டு அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, ஒருவேளை அவருக்கு ஏதேனும் நடந்து விட்டால் அந்த குற்ற உணர்வுடன் வாழ்நாள் முழுக்க வாழமுடியாது. அவரது உடல்நிலை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் எப்போதும் அவர்தான் என்னுடைய குருநாதர். அவருடைய ஆரோக்கியத்திற்காக தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்வதே நம்முடைய வேலை என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
50 சதவீதத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் : காசி தியேட்டருக்கு அபராதம்50 சதவீதத்திற்கு அதிகமான ... இது மாஸ்டர் பொங்கல் டா - கீர்த்தி சுரேஷ் இது மாஸ்டர் பொங்கல் டா - கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 ஜன, 2021 - 08:56 Report Abuse
ஒரு பாமரன் இந்த பூமிக்கு வந்த எல்லோரும் ஒரு நாள் போய் சேர வேண்டியவர்கள் தான். அதற்காக ஓடி ஒளிவது எந்த வகையில் நியாயம்? மூச்சுக்கு முன்னூறு முறை ஆன்மிகம் ஆன்மிகம் என்று சொல்பவர்கள் ஏன் அந்த கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இறப்பை பற்றி பேசவேண்டும்? அந்த இறைவன் நினைத்தால் ஒருவர் நூறாண்டு காலம் வேண்டுமானாலும் வாழலாம். இல்லையேல் பூமியை பார்க்காமலே கூட இருக்கலாம். நல்லா பணம் பார்த்து விட்டார். அரசியலுக்கு வந்தால் அதை எல்லாம் செலவு செய்ய வேண்டும். அதை செய்ய முடியாது அவரால். அதனால் உடல் நிலையை காரணம் காட்டி ஜகா வாங்கிவிட்டார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in