விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மூடப்பட்ட தியேட்டர்களில் உட்காருவதற்கு மக்கள் அச்சமடைந்த காரணத்தாலும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராத காரணத்தாலும் தியேட்டர்கள் பக்கம் அதிகமான மக்கள் செல்லவில்லை.
தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட நிலையில் திரையுலகினர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை வெளியிடும் கோரிக்கையை அதன் தயாரிப்பாளரிடம் முன்வைத்தனர்.
அவரும் பொங்கல் வெளியீடு என படத்தை அறிவித்தார். அடுத்த சில தினங்களில் மாநில அரசும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் மூடப்பட்ட ஏ.சி அரங்கினுள் மக்கள் மூன்று மணி நேரம் அமர்ந்து ஒரு படத்தைப் பார்ப்பது ஆபத்தானது என்ற கருத்தைப் பரப்பினர்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கை அனுமதி என்பது மத்திய அரசு பிறப்பித்த வழிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டது. அதைத் தொடர்ந்து தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் மாநில அரசு அனுமதி வழங்கும் என்ற தகவல் பரவி வருகிறது.
இதனால், பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட 'மாஸ்டர்' படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரையுலகினரும் அது குறித்து தெளிவாக சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றால் 'மாஸ்டர்' பட வியாபாரத் தொகையான 200 கோடி ரூபாயை வசூலிக்க கால தாமதம் ஆகும்.
தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தியேட்டர்களுக்கு முன்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் 'மாஸ்டர்' பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் 50 சதவீத அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள்.