தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த, 1980களில், தமிழ் சினிமாவில் கோலோச்சிய, அம்பிகா, ராதா சகோதரிகளை தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. இவர்களில், ராதா குறிப்பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி, இவரது வாரிசான, கார்த்திகாவும், சினிமா பிரவேசம் செய்துள்ளார். "கோ படத்தின் வெற்றிக்கு பின், தற்போது, பாரதிராஜா இயக்கத்தில், அன்னக் கொடியும் கொடி வீரனும் என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார். அவர் அளித்தபேட்டி...
* தீபாவளி
நான் பிறந்து வளர்ந்தது மும்பை. இங்கு, தீபாவளியை "கிராண்டா கொண்டாடுவாங்க. எங்க ஏரியாவில், பட்டாசு வெடிப்பதில், பயங்கர போட்டியே இருக்கும். எங்க அப்பா, ஒரு லட்ச ரூபாய்க்கு வெடி வாங்கி தருவார். எங்க அம்மாவோ, இதற்கு நேர் மாறா இருப்பாங்க. தீபாவளி முதல் நாள் அதிகாலை 3 மணி துவங்கி, அடுத்த நாள் வரை பட்டாசு வெடிப்போம். ரொம்ப ஜாலியா இருக்கும்.
* மும்பை
மும்பை கலாசாரம், ரொம்ப மாடர்னானது. அப்பா ரொம்ப கண்டிப்பானவர். எங்கேயும், வெளியே அனுப்ப மாட்டார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர்களில், "பார்ட்டிக்கு போகாத பெண்களில் நானும் ஒருத்தி.
* பிடித்த பாடல்
ரொம்ப டென்ஷனாக இருந்தால், "கோ படத்தில் உள்ள, "வெண்பனியே பாடலை பலமுறை கேட்பேன். டென்ஷன் மறைந்து, உற்சாகம் பொங்கி வழியும். என் அம்மாவுடைய பாடல்களில் "பூவ எடுத்து, ஒரு மாலை பாட்டு ரொம்ப பிடிக்கும்.
* கோபம்
என்னைப் பற்றி, யார் என்ன கூறினாலும், மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். தைரியமாக, அவர்களின் முகத்துக்கு நேராகவே பதில் கூறி விடுவேன். அவ்ளோ சீக்கிரம் கோபம் வராது. எனக்கு, "ஈகோவும் இல்லை. "ஈகோ இருந்தால், சின்ன பிரச்னை கூட, பெரிதாகி விடும்.
* தோழிகள்
எனக்கு தோழிகள் அதிகம் உள்ளனர். லஷ்மி மஞ்சு, பிந்து மாதவி ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். ஹன்சிகா, என் பள்ளி தோழி, நேரம் கிடைத்தால், பயங்கரமா அரட்டை அடிப்போம்.
* காதல்
யாரையாவது காதலித்தால், அம்மாவும், அப்பாவும் "ஓ.கே சொல்வார்களா என, தெரியவில்லை. நான் பார்க்கும் ஆளு, எனக்கு மட்டும் பிடித்தா போதாது; அப்பா, அம்மாவுக்கும், என் குடும்பத்துக்கும், பிடிச்சவரா இருக்கணும். இப்போதைக்கு நடிப்பில் கவனம் செலுத்துவது தான் என் முதல் வேலை.