பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மற்ற பாடலாசிரியர்களை விட தற்போது அதிக பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர் மதன் கார்க்கிதான். சிவாஜியில் எழுதத் தொடங்கியவர் இதுவரை 180 பாடல்களை எழுதி முடித்து விட்டார். அதில் 100 பாடல்கள் ஹிட். மதன் கார்க்கியின் எளிமையே அவருக்கு நிறைய பாடல் வாய்ப்புகளை பெற்றுத் தருகிறதாம். முதலில் தான் வைரமுத்துவின் மகன் என்கிற மாதிரி எந்த இடத்திலும் காட்டிக் கொள்ள மாட்டார். மற்ற பாடலாசிரியர்களுக்கு இருக்கும் "வேறுவித" பழக்கங்கள் எதுவும் அவருக்கு கிடையாது. அவசரமாக பாட்டு வேண்டும் என்றால் கம்பெனி அலுவலகத்துக்கே வந்து அமர்ந்து எழுதிக் கொடுத்துவிட்டுப்போவார். எத்தனை திருத்தம் என்றாலும் புன்முறுவலோடு செய்து கொடுப்பார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் தேடிப்போய் வாய்ப்பு கேட்பார். தராவிட்டாலும் சிரித்து நன்றி சொல்லிவிட்டு திரும்புவார். சில கம்பெனிகள் கார்க்கி யார் என்று தெரியாமல் திருப்பி அனுப்பி விட்டு, தெரிந்த பிறகு ஓடிவந்து வாய்ப்பு தர வந்திருக்கிறார்கள். அப்போது "நீங்கள் என் திறமையை நிராகரித்துவிட்டீர்கள். இப்போது இன்னார் மகன் என்று வாய்ப்பு தர வருகிறீர்கள். மன்னிக்கணும். உங்க நிராகரிப்பை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன்" என்று சொல்லிவிடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாட்டுக்கு போனால்தான் பாட்டு வரும், கேரளாவின் படகு வீட்டில் உட்கார்ந்தால்தான் பாட்டு வரும். என்று தயாரிப்பாளருக்கு எந்த செலவும வைப்பதில்லை. ஒரு பாட்டுக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று பேரம் பேசுவதில்லை. கொடுக்கிற சம்பளத்தை இன்முகத்தோடு பெற்றுக் கொள்வார். என்கிறார்கள்.
கார்க்கிய பார்த்து கத்துக்குங்க கவிஞர்ஸ்...!!