பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
மற்ற பாடலாசிரியர்களை விட தற்போது அதிக பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர் மதன் கார்க்கிதான். சிவாஜியில் எழுதத் தொடங்கியவர் இதுவரை 180 பாடல்களை எழுதி முடித்து விட்டார். அதில் 100 பாடல்கள் ஹிட். மதன் கார்க்கியின் எளிமையே அவருக்கு நிறைய பாடல் வாய்ப்புகளை பெற்றுத் தருகிறதாம். முதலில் தான் வைரமுத்துவின் மகன் என்கிற மாதிரி எந்த இடத்திலும் காட்டிக் கொள்ள மாட்டார். மற்ற பாடலாசிரியர்களுக்கு இருக்கும் "வேறுவித" பழக்கங்கள் எதுவும் அவருக்கு கிடையாது. அவசரமாக பாட்டு வேண்டும் என்றால் கம்பெனி அலுவலகத்துக்கே வந்து அமர்ந்து எழுதிக் கொடுத்துவிட்டுப்போவார். எத்தனை திருத்தம் என்றாலும் புன்முறுவலோடு செய்து கொடுப்பார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் தேடிப்போய் வாய்ப்பு கேட்பார். தராவிட்டாலும் சிரித்து நன்றி சொல்லிவிட்டு திரும்புவார். சில கம்பெனிகள் கார்க்கி யார் என்று தெரியாமல் திருப்பி அனுப்பி விட்டு, தெரிந்த பிறகு ஓடிவந்து வாய்ப்பு தர வந்திருக்கிறார்கள். அப்போது "நீங்கள் என் திறமையை நிராகரித்துவிட்டீர்கள். இப்போது இன்னார் மகன் என்று வாய்ப்பு தர வருகிறீர்கள். மன்னிக்கணும். உங்க நிராகரிப்பை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன்" என்று சொல்லிவிடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாட்டுக்கு போனால்தான் பாட்டு வரும், கேரளாவின் படகு வீட்டில் உட்கார்ந்தால்தான் பாட்டு வரும். என்று தயாரிப்பாளருக்கு எந்த செலவும வைப்பதில்லை. ஒரு பாட்டுக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று பேரம் பேசுவதில்லை. கொடுக்கிற சம்பளத்தை இன்முகத்தோடு பெற்றுக் கொள்வார். என்கிறார்கள்.
கார்க்கிய பார்த்து கத்துக்குங்க கவிஞர்ஸ்...!!