ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக்கின் அடுத்த படம் அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை, சகுனியில் ஒர்க் அவுட் ஆன கார்த்தி-சந்தானம் ஜோடி இதிலும் உண்டு, கார்த்திக்கை கட்டிப்பிடித்து ஆடப்போகிறவர் அனுஷ்கா. படம் பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் இவை....
*கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம். அவரது உறவினர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்,
*கிராமத்திலிருந்து ஒரு வேலையாக சென்னை வரும் கார்த்திக் தனது தூரத்து உறவினரான சந்தானம் வீட்டில் தங்குகிறார். கார்த்திக்கை சுத்தமாக பிடிக்காத சந்தானம் அவரை வீட்டை விட்டு விரட்ட பல பிளான்களை போடுகிறார். அதில் மொக்கை வாங்குகிறார். இதுதான் காமெடி ஏரியா. வந்த இடத்தில் ஒரு நியாத்தை கேட்கப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளும் கார்த்தி அதிலிருந்து எப்படி மீண்டு தான் வந்த காரியத்தை முடிக்கிறார் என்பது ஆக்ஷன் பிளாக். இதற்கிடையில் அனுஷ்காவுடன் காதல் வெளிநாட்டு டூயட் எல்லாம் உண்டு.
*கார்த்திக் ஓடும் ரயிலின் கூறை மீது நின்று கொண்டு உயிரை பணயம் வைத்து சண்டை போட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 7 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ரயிலை வாங்கி அதனை மைசூர் டூ பெங்களூர் ரூட்டில் ஓடவிட்டு ஹெலிகாப்டரில் துரத்தி படம் எடுத்திருக்கிறார்கள்,
*அனுஷ்கா முதன் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். எதிரிகளோடு பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுகிறார்.
*அனுஷ்கா கேரவன் வேண்டும் என்று கேட்காமல் செட்டிலேயே திரைகட்டி உடை மாற்றி நடித்தாராம்.
*மிலிந்த்சோமன், சுமன், மகாதேவன் ஆகியோர் வில்லன் கூடாரத்தை சேர்ந்தவர்கள்.
*சென்னை, பாண்டிச்சேரி, சாலக்குடி, ஐதராபாத், விசாகபட்டினம், மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
*ஒரு பாடலுக்காக 12 செட் போட்டிருக்கிறார் கலை இயக்குனர் பிரபாகர்.
* படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். வாலி, பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
*இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் அலெக்ஸ் பாண்டியன். பொங்கலுக்கு வருகிறார்.
ஒண்ணும் புதுசா இல்லியேஜி...!!