டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் அமீருக்கும், அமீரின ஆஸ்தான பாடலாசிரியர் சினேகனுக்கு சமீபகாலமாக, அப்படி என்ன இகோ பஞ்சாயத்தோ தெரியவில்லை! கடந்த சில வாரங்களுக்கு முன் கனடாவில் நடந்த ஆதிபகவன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒலி - ஒளிபரப்பட்ட மிக நீண்ட ஆதிபகவன் டீம் பற்றிய முன்னோட்டத்தில் சினேகனை சின்ன அளவில் கூட காட்டவில்லை... பேசவில்லை எனும் வருத்தம் சினேகனுக்கு!
இதை கனடா ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் சாடை மாடையாக வெளிப்படுத்தினார் சினேகன். அதற்கு மேடையிலேயே பதிலுரைத்த இயக்குநர் அமீர், இதுதான் சினேகனின் வருத்தமா, இல்லை இந்தபடத்தில் பாடலாசிரியர்அறிவுமதிக்கும் வாயப்ப்ளித்தது சினேகனுக்கு வருத்தமா...? என கிண்டலாக கேட்டதுடன் ஊரில் ஓடி வந்த எனக்கும், இயக்குநர் பாலாவுக்கும் ஆரம்பகாலத்தில் அடைக்கலம் தந்து எங்களது குருநாதர் பாலுமகேந்திராவிடம் எங்களை அனுப்பி வைத்து எங்களது வாழ்க்கையில் ஒளியேற்றியவர் பாடலாசிரியர் அறிவுமதி! அவர், நான் தனியாக மெளனம் பேசியதே என படம் ஆரம்பித்த பொழுதில் தொடங்கி, பருத்திவீரன் வரை பாடல் எழுதவதில்லை... என விரதம் இருந்தார். அதனால் அவரை அப்படங்களுக்கு அணுகவில்லை! இப்பொழுது எழுதுகிறார். இனி என் ஒவ்வொரு படத்திலும் அவர் எழுதுவார். இதனால் சினேகனுக்கு வருத்தம் என்றால், என்னால் எதுவும் செய்ய முடியாது! என கிண்டலாக பேசினார் அமீர்!
அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வெற்றிச்செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பாலாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமீர், அப்படத்திற்கு பாடல்கள் எழுதியதால் மேடையில் வீற்றிருந்த மதன் கார்க்கியை பார்த்து எங்களுக்கெல்லாம் மதன்கார்க்கியின் அப்பா கவிப்பேரரசு வைரமுத்து உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை! ஆனால், அவர் எழுதினால் அவரிடம் எப்படி கரெக்ஷ்ன் சொல்வது...? எனும் தயக்கம். மேலும் மொத்தப்படத்திற்கும் நானே பாடல்கள் எழுதுவேன்! வேறு யாரும் எழுதக்கூடாது என கண்டீசன் போடுவாரோ எனும் பயம், ஆதலால் அவரை அணுகுவது இல்லை. நீண்டநெடுங்காலமாக அவரது சிம்மாசனத்தை யாராலும் காலி செய்ய முடியவில்லை. அதை காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு மதன்கார்க்கியால் மட்டுமே மெல்ல மெல்ல வந்து சேர முடியும்! அவ்வாறு சீக்கிரமே மதன் வந்துவிடுவார் என்று அவரது பாடல் வரிகள் சொல்கின்றன.அதன்பின் அவருடன் இணைந்து படங்கள் செய்ய காத்திருக்கிறேன் என்றார்!
இந்த விஷயமும் சினேகனின் காதுகளுக்கு போய், அமீர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம் சினேகன்! முதல் கூறிய செய்திக்கு சினேகன் கோபபடலாம் நியாயம்! இரண்டாவது செய்திக்கு வைரமுத்து அல்லவா வருத்தப்பட வேண்டும்?!