அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தணிக்கைக்குழுவில் இருப்பவர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், சின்ன படம் பெரிய படம் என்ற வித்தியாசம் பார்க்கக்கூடாது என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.ஆர் கூறியுள்ளார்.
எம்.கே.எல்.புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் கனல். டி.ஜெயக்குமார் இயக்கி தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வாளகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளரும், இயக்குனருமான கே.ஆர் மற்றும் அபிராமி ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது கே.ஆர் பேசும்போது, கனல் மாதிரியான சின்ன படங்கள்தான் இன்றைக்கு சினிமா உலக தொழிலாளர்களை காப்பாற்றி வருகின்றன. அதனால் இந்த மாதிரி படங்களுக்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக, தணிக்கைக்குழுவினர் சின்ன பட்ஜெட் படங்கள் தரமாக இருந்தபோதும் அவற்றில் ஏதாவது குறைகளை கண்டுபிடித்து யு ஏ, அல்லது ஏ சானறிதழ் கொடுத்து அந்த படங்களின் தரத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர்.
அதேபோல் பெரிய பட்ஜெட் படங்களில் சீன் பை சீன் முத்தக்காட்சிகள், ஆபாசமான காட்சிகள் இருந்தாலும் அதை கண்டு கொள்வதில்லை. அதோடு அந்த படங்களுக்கு யு சான்றிதழ் கொடுக்கிறார்கள். இப்படி செய்வது நியாயமில்லை. அவர்கள் சின்ன படம் பெரிய படம் என்கிற பேதம் பார்க்காமல் ஒரேமாதிரியான மனநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் சென்சார் போர்ட்டில் யார் யாரெல்லாமோ இருக்கிறார்கள். அதாவது அரசியலைச்சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் என்றெல்லாம் அதிகாரிகளாக உள்ளனர். அவர்களெல்லாம் எங்களைப்போன்றோரிடம் கலந்துரையாடல் நடத்திகூட சினிமா பற்றிய விசயங்களை பகிர்ந்து கொண்டு படங்களுக்கு நியாயமான சான்றிதழ்களை வழங்கலாம் என்றார்.