இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முத்தம் கொடுத்தது மன்னிக்க முடியாத தவறு ஒன்றுமில்லை. அது அன்பின் வெளிப்பாடுதான் என்கிறார் சிம்பு. ஏற்கனவே வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதடு கவ்வி இவர் கொடுத்த முத்தம் அந்த நேரத்தில் டீன்ஏஜ்களின் ஹாட் டாப்பிக்காக இருந்தது. அதையடுத்து சமீபத்தில் வெளியான கொலைவெறி அனிருத்-ஆன்ட்ரியா முத்தக்காட்சி படங்கள் இன்னும் பெரிய அளவில் பரபரப்பு கூட்டி விட்டது. ஆனால் இதை மீடியாககள் கொச்சைப்படுத்துவது போல் செய்தி வெளியிட்டன. ஆனால் சிம்புவோ, என்னைப்பொறுத்தவரை ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது நல்ல விசயம்தானே. முத்தம என்பது அன்பின் வெளிப்பாடு, நட்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு இப்படி எத்தனையோ விதம அதில் இருக்கிறது.
அதனால் யார் முத்தம் கொடுத்தாலும் அதை தப்பான கண்ணோட்டததில் பார்ப்பதை முதலில் விட்டு விடுங்கள். அதை ரசியுங்கள். அப்போதுதான்அந்த முத்தத்தில் உள்ள அழகு தெரியும். என்னைகூட வல்லவன் படத்துக்குப்பிறகு நிறைய கமெண்ட் அடித்தனர். ஆனால் நான் எதையும செவிகொடுத்தே கேட்கவில்லை. இபபோதுகூட அந்த போட்டோக்களை பார்த்து ரசிக்கிறேன். காரணம் எனக்கு ரசனை அதிகம் என்கிறார் சிம்பு.