மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சேட்டை என்று தலைப்பு வைத்ததால்தானோ என்னவோ அந்த படத்தில் நடிக்கும் அஞ்சலி, ஹன்சிகா இருவரும் ஆரம்பத்திலிருந்தே ஏதாவது சேட்டைத்தனம் செய்து கொண்டேயிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் டெல்லி பெல்லி படத்தில் இருந்தது போல் வல்கரான வசனங்களை நான்பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார் ஹன்சிகா. இதனால் சில வார்த்தைகளை அவருக்காக திருத்தம் செய்தனர். அதையடுத்து முத்தக்காட்சியில் நடிக்கவே முடியாது என்று கடும சேட்டை செய்திருக்கிறார் அஞ்சலி. அதிலும் அவரது தாய்குலம் புகுந்து, என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? இப்படியொரு படமே எங்களுக்குத்தேவையில்லை என்று சொல்லி ஸ்பாட்டில் இருந்தே அஞ்சலியை இழுத்துச்சென்று விட்டாராம்.
இந்த பிரச்னை காரணமாக சில நாட்கள் படப்பிடிப்பே தடைபட்டிருக்கிறது. என்றாலும், அப்படியொரு காட்சி படத்திற்கு அவசியம் தேவை என்று ஒருவழியாக அஞ்சலியிடம் விளக்கி, அவரது தாய்குலத்தையும் சம்மதிக்க வைத்து ஆர்யா- அஞ்சலியின் உதட்டு முத்தக்காட்சியை படமாக்கியிருக்கிறர்கள். ஆனால் இந்த ஒரு காட்சியை வைத்தே எக்ஸ்ட்ராவாக 5 லட்சத்தை கறந்து விட்டாராம் தாய்குலம். சேதியறிந்து, அடி ஆத்தி, அப்படின்னா அஞ்சலியோடு ஒரு இச்சியோட ரேட்டு 5 லட்சமா? ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே அம்மணி என்று அடுத்தடுத்து அஞ்சலியை புக்பண்ணவிருக்கும் படாதிபதிகள் கரண்ட் கம்பத்தில் கை வைத்தது போல் ஷாக்கில் நிற்கின்றனர்.