பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
முனி, சக்கரகட்டி உள்பட பல படங்களில் நடித்தவர் வேதிகா. ஆனால் அவரது பெயர் ரீச் ஆன அளவுக்கு அவரது நடிப்பு ரீச் ஆகவில்லை. இருப்பினும் இடைவிடாத முயற்சி காரணமாக தற்போது பாலாவின் பரதேசி படத்தில் நாயகியாக நடித்துள்ளார் வேதிகா. இந்த படத்துக்காக பல மாதங்கள் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்லும் வேதிகா, தேயிலை தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிகளில் கல்லிலும் முள்ளிலும் நடந்து கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். சில நாட்கள் மேக்கப் போட்டு ஸ்பாட்டில் காத்திருப்பேன். ஆனால் அன்று முழுக்க என்னை நடிக்க கூப்பிடவே மாட்டார் டைரக்டர். ஆனால் சில நாட்களில் காலையில் தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் விடவே மாட்டார். அவரது மூடைப்பொறுத்து படப்பிடிப்பு நடத்துவார். என்றாலும் டைரக்டரின் மனநிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டு பரதேசி படத்தில் நடித்துள்ளேன் என்கிறார் வேதிகா.
இப்படி பலவிதமான கஷ்டங்கள் ஒருபுறமிருக்க, ஒருநாள் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, மரங்களில் இருந்து விழுந்த சில அட்டப்பூச்சிகள் வேதிகாவின் உடம்பில் விழுந்து கடித்து ரத்தம் குடித்து விட்டனவாம். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி விட்டாராம். அதோடு, இனி இந்த ஸ்பாட்டில் நான் ஒரு நிமிடம்கூட இருக்கவே மாட்டேன் என்று அங்கிருந்து விட்டால் போதுமென்று ஓட்டம்பிடித்து விட்டாராம் வேதிகா.