விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா |
எந்த மேடை ஏறினாலும், எங்கு ரசிகர்களை கண்டாலும் மச்சான்ஸ் என்று அழைப்பது நமீதாவின் வாடிக்கையாயிற்று. அப்படித்தான் கடந்த திங்களன்று சென்னையில் நடந்த யமுனா படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த நமீதா, மைக் முன்னால் சென்றதும் மேடையில் இருக்கும் மச்சான்ஸ், கீழே இருக்கிற மச்சான்ஸ் அனைவருக்கும் வணக்கம் என்று பேச ஆரம்பித்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிக கோடிகள் பயங்கரமாக ஆர்பரித்தனர். ஆனால் மேடையில் அமர்ந்திருந்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் வைரமுத்து இரண்டு பேரும் அந்த வார்த்தையைக்கேட்டு ஷாக் ஆகிப்போய் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆனால் நமீதா பேசப்பேச ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஒருவழியாக காட்டுமழை போன்று நமீதா பேசி அடங்கினதும், மீண்டும் மேடையில் அமராமல், விடைபெற்று வெளியேறிவிட்டார். ஆனால் நமீதாவுக்கு கிடைத்த கைதட்டலால் ஆடிப்போயிருந்த மேற்படி பெருசுகள் முகத்தில் அவர் சென்றபிறகுதான் ஒரு தெளிவு தெரிந்தது. அதன்பிறகு யதார்த்த மனநிலைக்கு வந்தனர்.ஆனால் இப்படி அவர்கள் இருவரும் பொதுவாக நமீதா மச்சான்ஸ் என்று சொன்னதை ஆட்சேபனை தெரிவிப்பது போல் இருந்தாலும், மற்றவர்கள் அனைவருக்கும் அது பிடித்துப்போக, அவர்களெல்லாமே குஷி மூடிலேயே இருந்தனர்.