கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
வேட்டை மன்னன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிப்பதற்கு உள்காரணம் ஒன்று இருக்கிறது. அதாவது, லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வேட்டை படத்தில் ஆர்யா நடித்த வேடத்திற்கு முதலில் சிம்புவிடம்தான் பேசியிருந்தனர். ஆனால் சிம்பு வழக்கம்போல் தனது பாணியில் கதைக்குள் இறங்கி நிறைய கரெக்சன் சொன்னவர், சில நாட்கள் கழித்து வந்து ஒரு புது கதையையே சொல்லி, இந்த மாதிரி ஸ்கிரிப்ட் பண்ணுங்கள். அதுதான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொன்னாராம். இதனால் அதிர்ச்சியடைந்த லிங்குசாமி கதையை மாற்ற வேண்டாம், கதாநாயகனையே மாற்றி விடுவோம் என்றுதான் பின்னர் சிம்புவை ஏறக்கட்டிவிட்டு அந்த வேடத்துக்கு ஆர்யாவை புக் பண்ணினார். இதெல்லாம் பழைய கதை.
ஆனால் அந்த வேகத்தில் வெளியேறிய சிம்பு, நான் சொன்ன கதையையே வேட்டை மன்னன் என்று படமாக்கி ஜெயித்துக்காட்டுகிறேன் என்று அந்த கதையை வேக வேகமாக படமாக்க தொடங்கினார். ஆனால் பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக படத்தை வருடக்கணககில் சவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறார். என்றாலும், சிம்புவின் வேகம் குறையவில்லை. தோல்வியடைந்த வேட்டையை விட எனது வேட்டை மன்னன் கில்லி மாதிரி சொல்லியடிப்பான். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று தில்லாக பேசிக்கொண்டு திரிகிறார்.