பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
ஆதிபகவன் படத்தை இரண்டு வருடங்களாக படமாக்கியதோடு, ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க வைத்து என்னை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் அமீர் என்று அவரை கடுமையாக விமர்சித்து வந்தார் ஜெயம்ரவி. அதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சில சமயங்களில் அமீரை கொலை செய்து விடலாம் போல் எனக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது என்றும் கூறினார்.
ஆனால் இப்போது படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெறுவதால் தனது பழைய கோபதாபத்தை தள்ளி வைத்து விட்டு அமீரையும், அந்த படத்தில் பணியர்றறிய அனுபவங்களையும் தான் இனிமையாக அசைபோட்டு வருவதாக மாற்றி பேசி வருகிறார் ஜெயம்ரவி.அதிலும், அந்த படத்தில் நடித்தது எனது ரேஞ்சையே மாற்றியிருக்கிறது. படப்பிடிப்பு நடந்தபோது என்னை அமீர் வருத்தி எடுப்பதாக வேதனைப்பட்டேன். ஆனால் இப்போது படத்தை பார்க்கும்போது ரொம்ப நிறைவாக இருக்கிறது. பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை உணர்கிறேன் என்று அமீரையும், ஆதிபகவன் படத்தையும் பக்கம் பக்கமாக புகழ்ந்து வருகிறார் ஜெயம்ரவி.