'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய தேதியில், பாலிவுட்டின் "மோஸ்ட் வாண்டட் நடிகையாக இருப்பவர், பிரியங்கா சோப்ரா தான். வெள்ளித் திரைக்கு, இவர் முதலில் அறிமுகமான படம் விஜய் நடித்த, "தமிழன். அதற்கு பின், பாலிவுட்டில் பிசியாகி விட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், அவருக்கு அழைப்பு விடுத்தாலும், "சாரி, இந்தியில் டைட் ஷெட்யூல் இருக்கிறது என்ற பதில் மட்டுமே, பிரியங்காவிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில் பிரியங்காவின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் மாநில மொழி திரைப்படங்களை நோக்கி, பார்வையை திருப்பியுள்ளார்.
அமிதாப் நடித்து, இந்தியில் பெரும் வெற்றி பெற்ற, "ஜாஞ்சிர் என்ற படம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் "ரீ-மேக் ஆகிறது. இரண்டு மொழிகளிலுமே, ஹீரோயின் பிரியங்கா தான். தெலுங்கில், இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளவர், ராம் சரண் தேஜா. "தெலுங்கில் அறிமுகமாவதை நினைத்தாலே, நெஞ்சு பட படவென அடித்துக் கொள்கிறது. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற, தென் மாநில படங்களில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன் என்கிறார், பிரியங்கா.