தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடுகளம் டாப்சிக்கு கோடம்பாக்கத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை மனசு நிறைய உள்ளதாம். அதனால்தான் என்னதான் ஆந்திராவில் சிலகாலம் காலம் தள்ளினாலும் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கும் அஜீத் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆகியிருக்கும் டாப்சி, அடுத்தபடியாக மறந்தேன் மன்னித்தேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனால் இந்த படங்களில் நடித்தபடியே கோலிவுட்டின் மார்க்கெட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
அதன்காரணமாக, சில முன்னணி இயக்குனர்களுக்கு போன் போட்டு அவர்களின் சமீபத்திய படங்கள் பற்றி ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளி வருகிறார் டாப்சி. தங்களது படைப்புகளை ஒரு நடிகையே புகழும்போது யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? அதனால் புகழ்ச்சியை விரும்பும் சில இயக்குனர்கள் அதில் மயங்கிப்போய், தங்களது புதிய படங்களில் டாப்சிக்கு வாய்ப்புத்தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம். டாப்சியின் இந்த புகழ்ச்சிக்கு இன்னும் எத்தனை இயக்குனர்கள் இரையாகப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.