ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாகை சூடவா இனியா, அதன்பிறகு மெளனகுரு படத்தில் நடித்தவர் இப்போது தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் கமிட்டாகி வெளியேற்றப்பட்டார். ஆனால் அந்த படத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டது தனக்கு பெரிய இழப்பு என்று நினைக்கும் இனியா, மீண்டும் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்து எனக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்து கொள்வேன் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
அவரிடத்தில் கிளாமருக்கு உகந்த நடிகை இல்லை என்று உங்களை கோலிவுட் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறதே? என்று அவரைக்கேட்டால், இதுவரை எனக்கு யாரும் அந்த மாதிரி வேடங்களை தரவில்லை. ஆனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது அதிரடி நடிகையாக உருவெடுப்பேன் என்கிறார். அதோடு, தற்போது எனக்கு மலையாளம், தெலுங்கில் இருந்து அதிகப்படியான படவாய்ப்புகள் வருகிறது. ஆனாலும், தமிழில் முன்னணி நடிகையாவதே எனது நோக்கம் என்று சொல்லும் இனியா, கவர்ச்சிகரமான கதைகள் கிடைத்தாலும் அதை சந்திக்க என்னிடம் போதுமான உடல்கட்டு இருக்கிறது. அதனால் எதற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்கிறார்.