பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
அனுஷ்கா மேக்-அப் விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருப்பவர். அதனால் மும்பையை சேர்ந்த மேக்-அப் உமன் ஒருவரை பெரிய சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தார். ஒரு சாதாரண மேக்-அப் மேனுக்கு என்ன சம்பளம் புரட்யூசர் கொடுப்பாரோ அதை மட்டுமே அவருக்கும் கொடுக்கச் செய்து மேற்கொண்டு உள்ள சம்பளத்தை தன் கையில் இருந்து கொடுத்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் அதற்கும் பிரச்னை செய்து விட்டார்கள் பெப்சி அமைப்பினர். அலெக்ஸ்பாண்டியன் படப்பிடிப்பு ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நடந்தபோது அங்கு திரண்டு சென்ற பெப்சி அமைப்பினர் அனுஷ்காவின் கேரவனுக்கு வெளியே கோஷம் போட்டு அவரை அவமானப்படுத்தி விட்டனர். மும்பை மேக்அப் உமனை உடனே வெளியேற்ற வைத்து விட்டனர். இது அனுஷ்காவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இனி தமிழ் படத்தில் நடிக்கும்போது தனியாக மேக்அப் மேன் வைத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தார். அதன்படி இப்போது தமிழ் படத்தில் நடித்தால் தனக்குதானே மேக்அப் போட்டுக் கொள்கிறார். இதனை எந்த சங்கத்தாலும் தடுக்க முடியாது. என் முகத்தில் யார் கை வைக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதை மற்றவர்கள் முடிவு செய்வதை நான் அனுமதிக்க முடியாது. ஆனாலும் சினிமா விதிகளை மதித்து எனக்கு நானே மேக்அப் போட்டுக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.