ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விமலாராமன் ஆஸ்திரேலியாவில் பிறந்த தமிழ்நாட்டு பொண்ணு. கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படத்தின் மூலம் அறிமுகமானார். பொய் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனால் கேரளா பக்கம் ஒதுங்கி அங்கு மளமளவென நடிக்கத் தொடங்கினார். சில வருடத்துக்கு பிறகு ராமன் தேடிய சீதை மூலம் தமிழுக்கு திரும்பினார். அதன் பிறகும் தமிழில் வாய்ப்பு அமையவில்லை. அப்படியே யூ டேர்ன் அடித்து தெலுங்கிற்கு போனார் அங்கு மளமளவென படங்களில் நடித்தார். தமிழ் படம் மட்டும் நமக்கு ஏன் கைகூட மறுக்கிறது என்பது விமலா ராமனுக்கு பெரும் குறையாகவே இருந்தது.
பிறகு திடீரென இந்தி வாய்ப்பு வந்தது. அப்ரா தபாரி என்ற படத்தில் நடிக்கத் துவங்கினார். அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மும்பை மிரர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்திக்கே வந்தாகிவிட்டது. இனி தமிழ படத்தை பற்றி கவலை இல்லை என்று நினைத்தார். அதனால் தமிழ் மீடியாக்களிடம் பேசுவதைகூட தவிர்த்தார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு இந்திப் படங்களும் தாமதாமாவதால் இந்த இடைவெளியில் தமிழில் நடிக்க வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே இவர் நடிக்க துவங்கிய ஆசு ராஜா ராணி ஜாக்கி படம் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில்தான் வாய்ப்பு வேட்டையை துவங்கி இருக்கிறார். தனக்கு தெரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து "நவ் ஐ எம் ஃப்ரீ" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். தனது லேட்டஸ்டான படங்களையும் மெயில் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம்தான் நீங்கள் அருகில் பார்ப்பது.
பாவம் வாய்ப்பு கொடுங்கப்பா...!!