'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிங்கக்குட்டி படத்தின் மூலம் அறிமுகமான ராம்குமாரின் மகன் சிவாஜிதேவ். தற்போது நடித்து வரும் படம் நந்தனம். 7 நாட்களில் நடக்கும் காதல் கதை. காவலன் படத்தில் அசின் காதலித்த விஜய்யை பொய்சொல்லி லவட்டிக் கொண்டு போவாரே அந்த மித்ராதான் ஹீரோயின். என்.எல் ஷியாமளன் இயக்குகிறார். கோபி சந்தர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடலில் ஒரு புதுமையை செய்துள்ளார்கள். படத்தில் இடம்பெறும் "ஏதோ ஏதோ உயிரிலே..." என்ற பாடல் வரிகள் உதடுகள் ஒட்டாத வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. எழுதியிருப்பவர் விவேகா.
எஸ்.பி.பாலசுப்பிரணியம் இருமிக் கொண்டே பாடிய "மணியோசை கேட்டு எழுந்து..." போலவும், ஒரே மூச்சில் பாடிய "மண்ணில் இந்த காதல்..." போலவும் "ஏதே ஏதோ உயிரிலே" பேசப்படுமாம்.
ஹீரோ, ஹீரோயின் உதடுகளாவது ஒட்டுமாஜி...