இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எனக்கு யாரும் போட்டி இல்லை; நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். மைனா படம்மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அமலாபால், தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தனது 21வது பிறந்த நாளை கொண்டாடிய அவர், திரையுலக அனுபவங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நான் கடினமாக உழைக்கிறேன். எனக்கு யாரும் போட்டி இல்லை; எந்த நடிகையையும் போட்டியாக நினைக்கவில்லை. விதிப்படி எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். கடவுளை நான் நம்புகிறேன். அது போல் எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு.
உணவு கட்டுப்பாடு எதையும் கடைபிடிப்பது இல்லை. படத்துக்கு தேவை என்றால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். போலியான மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன். சமீபத்தில் பட்டணப் பிரவேசம் என்ற மலையாள படம் பார்த்தேன். கடைசியாக நான் சிரித்து ரசித்து பார்த்த படம் அது. நண்பர்கள் நம் வாழ்க்கையின் இறுதி வரை வருபவர்கள். எனக்கு சாப்பிடவும், சினிமா பார்க்கவும் பிடிக்கும். சமீபத்திய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பர்பி. அந்த படத்தில் நானும் இருக்க விரும்பினேன், என்று கூறியுள்ளார்.