பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களை இயக்கிய அமீர் தற்போது இயக்கியுள்ள படம் ஆதிபகவன். ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நீது சந்திரா நாயகியாக நடித்துள்ளார். இதுவரை யதார்த்தமான கதைகளையே படமாக்கி வந்த அமீர், முதன்முறையாக இப்படத்தின் மூலம் கமர்சியல் கதையை படமாக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் 40 கோடி செலவில் இப்படத்தை படமாக்கி திரும்பியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது ஒரு நிருபர், யதார்த்தமான கதைகளை படமாக்கிய உங்களைப்போன்ற இயக்குனர்களால்தான் தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தோம். ஆனால் நீங்களும் கமர்சியல் படத்துக்கு திரும்பி சராசரி இயக்குனராகி விட்டீர்களே என்று அமீரை நோக்கி ஒரு கேள்விக்கணையை வீசினார்.
இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான அமீர், படைப்பாளி என்பவனை ஒரு வட்டத்துக்குள் அடக்கக்கூடாது. யதார்த்தம், கமர்சியல் இரண்டுவிதமான களங்களிலும் அவன் ஆடவேண்டும். உங்களைப்போன்றோர் இப்படி சொல்லும்போதுதான் ஒரு படைப்பாளி தோற்றுப்போகிறான் என்று சொன்னஅவர், இந்த படம் கமர்சியல்தான். ஆனால் எனது அடுத்த படமான கண்ணபிரான் யதார்த்தமான கதையில் உருவாகிறது என்றார்.