ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுக இயக்குனர் தண்டபானி இயக்கத்தில் உருவாகி வரும் படம் கள்ளத்தனம். புதுமுகங்கள் யுகன்-ஸ்வப்னா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூரில் நடைபெற்றது. அப்போது கதாநாயகியை துரத்தி வரும் வில்லன் மற்றும் அடியாட்களுடன் கதாநாயகன் யுகன் மோதுவது போன்ற சண்டை காட்சியை அங்கு படமாக்கினர். அதிரடியாக அந்த சண்டை காட்சி படமாகிக்கொண்டிருந்தபோது திடீரென்று அருகில் இருந்த கோயில் பகுதியில் இருந்து வந்த ஒரு பெரிய நல்ல பாம்பு கூட்டத்துக்கு அருகே வந்து படம் எடுத்து ஆடியிருக்கிறது. அதைப்பார்த்து கூடிநின்ற ஊர்மக்களெல்லாம் அலறிக்கொண்டு ஓடியிருக்கிறார்கள்.
அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அந்த பாம்பை குரல் எழுப்பி அங்கிருந்து நகர வைத்திருக்கிறார்கள். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது அப்போது, கதாநாயகன் யுகனும், வில்லன் கண்ணன் பயங்கரமாக மோதிக்கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வில்லன் நடிகர் கண்ணன் புதியவர் என்பதால் அவர் அடித்த ஒரு பலமான அடி நிஜமாலுமே ஹீரோ யுகனின் மீது விழுந்திருக்கிறது. இதனால் தோள்பட்டையில் பலத்த வலி ஏற்பட்டு கீழே சாய்ந்திருக்கிறார்.
இதையடுத்து, இந்த விபரீதம் நடக்கப்போவதை உணர்த்தத்தான் முன்பே கோயில் பாம்பு வந்து படப்பிடிப்பை நிறுத்த வைத்திருக்கிறது. அதையும் மீறி நாம் படப்பிடிப்பு வைத்ததால்தான் ஹீரோவுக்கு பலத்த அடிபட்டுள்ளது என்று முடிவு செய்த இயக்குனர் அத்தோடு படப்பிடிப்புக்கு பேக்அப் சொல்லி அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.