Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பு தளத்தில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு!

30 அக், 2012 - 10:19 IST
எழுத்தின் அளவு:

புதுமுக இயக்குனர் தண்டபானி இயக்கத்தில் உருவாகி வரும் படம் கள்ளத்தனம். புதுமுகங்கள் யுகன்-ஸ்வப்னா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூரில் நடைபெற்றது. அப்போது கதாநாயகியை துரத்தி வரும் வில்லன் மற்றும் அடியாட்களுடன் கதாநாயகன் யுகன் மோதுவது போன்ற சண்டை காட்சியை அங்கு படமாக்கினர். அதிரடியாக அந்த சண்டை காட்சி படமாகிக்கொண்டிருந்தபோது திடீரென்று அருகில் இருந்த கோயில் பகுதியில் இருந்து வந்த ஒரு பெரிய நல்ல பாம்பு கூட்டத்துக்கு அருகே வந்து படம் எடுத்து ஆடியிருக்கிறது. அதைப்பார்த்து கூடிநின்ற ஊர்மக்களெல்லாம் அலறிக்கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அந்த பாம்பை குரல் எழுப்பி அங்கிருந்து நகர வைத்திருக்கிறார்கள். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது அப்போது, கதாநாயகன் யுகனும், வில்லன் கண்ணன் பயங்கரமாக மோதிக்கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வில்லன் நடிகர் கண்ணன் புதியவர் என்பதால் அவர் அடித்த ஒரு பலமான அடி நிஜமாலுமே ஹீரோ யுகனின் மீது விழுந்திருக்கிறது. இதனால் தோள்பட்டையில் பலத்த வலி ஏற்பட்டு கீழே சாய்ந்திருக்கிறார்.

இதையடுத்து, இந்த விபரீதம் நடக்கப்போவதை உணர்த்தத்தான் முன்பே கோயில் பாம்பு வந்து படப்பிடிப்பை நிறுத்த வைத்திருக்கிறது. அதையும் மீறி நாம் படப்பிடிப்பு வைத்ததால்தான் ஹீரோவுக்கு பலத்த அடிபட்டுள்ளது என்று முடிவு செய்த இயக்குனர் அத்தோடு படப்பிடிப்புக்கு பேக்அப் சொல்லி அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ராஜ் - mumbai,இந்தியா
30 அக், 2012 - 22:58 Report Abuse
 ராஜ் தகவல் உண்மைதானா? ஒரு பாம்புதானா இல்ல ஹீரோயின் ஸ்வப்னா பார்த்து பல பாம்பு தலை எடுத்து ஆடுச்சா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in