ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்டர்நெட் மூலம் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகியுள்ள பாடகி சின்மயிக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி சின்மயி. சின்மயிக்கு ட்விட்டர் இணையதளத்தில் செக்ஸ் தொல்லைகள் வந்தன. அவரது படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு இருந்தனர். சின்மயியின் வயதான தாயை பற்றியும் ஆபாச கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் சின்மயி புகார் செய்தார்.
இதையடுத்து சின்மயிக்கு தொந்தரவு கொடுத்ததாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ராஜன் மற்றும் சரவணக்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தன்னைப் போல் பாதிக்கப்படும் பெண்கள் துணிச்சலாக போலீசில் புகார் செய்ய முன் வர வேண்டும் என்று சின்மயி கூறியுள்ளார். இந்நிலையில் சின்மயிக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்த நினைக்கும் தரம் கெட்ட மனிதர்கள் அப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும். சின்மயி எடுத்த நடவடிக்கைகள் சரியானவை என்று குஷ்பு கூறியுள்ளார்.