தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாற்றான். இதில் சூர்யா, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் அகிலன், விமலன் என்ற இரண்டு கேரக்டர் வரும். இதில் அகிலன் கேரக்டரில்தான் சூர்யா படப்பிடிப்பில் நடித்தார். விமலன் கேரக்டரில் வேறொருவர் நடித்தார். பின்னர் சூர்யா புளூமெட் முறைப்படி தனியாக விமலன் கேரக்டரில் நடித்து அது ஏற்கெனவே நடித்தவர் மீது தொழில்நுட்ப ரீதியாக பேஸ்ட் செய்யப்பட்டது. இதில் துல்லியமான லைட்டிங், துல்லியமான முகபாவம் வரவேண்டும் என்பதற்காக ஒரு நவீன முறையை கையாண்டார்கள்.
இது அவதார் படத்தில் ஜேம்ஸ் கேரூன் பயன்படுத்தியது. லைட்டிங் பால் என்ற முறையில் இது சாத்தியமானது. ஒரு ராட்சத பந்து போன்ற அமைப்பில் 360 டிகிரி கோணத்திலும், லைட்டிங் செய்யப்பட்டு 360 மினி கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கும், இதன் நடுவில் நின்று சூர்யா பல்வேறு விதமான உணர்வுகளை காட்டினார், மகிழ்ச்சி, துக்கம், அழுகை, ஆச்சர்யம், இப்படி விதவிதமாக செய்தார். அவை அனைத்தும் 360 டிகிரி கோணத்திலும் ஸ்கேன் செய்யப்பட்டது.
இந்த ஸ்கேனை வைத்துக் கொண்டு சூர்யா போன்ற அனிமேஷன் படங்களை உருவாக்க முடியும், அவ்வளவு ஏன் சூர்யா கால்ஷீட் கிடைக்காவிட்டால் அவர் நடிப்பது போன்ற படத்தையே எடுத்துவிட முடியும். இந்த ஸ்கேன்கள் தவறானவர்கள் கையில் கிடைத்தால் சூர்யா நடிப்பில் எந்தப் படத்தையும் எடுத்து விட முடியும். அதனால்தான் ஹாலிவுட் நடிகர்கள் இந்த 360 டிகிரி ஸ்கேனுக்கு ஒத்துக் கொள்வதில்லை. இப்போது மாற்றான் படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பங்கள் வெளியில் தெரியத் தொடங்கி விட்டன. அதனால் சூர்யா தனது தொடர்பான அனைத்து ஸ்கேன்கள், மற்றும் சாப்ட்வேர்களை கேட்டுள்ளார். அதை மொத்தமாக அவரிடம் கொடுக்கும் வேலைகளை அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இப்படி ஒரு வசதி இருந்தால்... தலைவரை வைத்து இப்போதும் வெற்றிப்ப படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கலாமே...!!