கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
வழக்கமாக அமீர் படத்தில் நடிகர்களை பிழிந்து எடுப்பார்கள் என்று கோலிவுட்டில் ஒரு பரவலான செய்தி உள்ளது. பருத்திவீரன் படத்தில் கார்த்தியும்-ப்ரியாமணியும் அப்படத்தின் ஷூட்டிங்கின் போது அமீர் வேலை வாங்குவதை பார்த்து கண்ணீர் விடாத குறையாக கதறி இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் ஜெயம் ரவி. அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதி பகவன் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிந்து இப்போது திரைக்கு வர தயாராகி கொண்டு இருக்கிறது. இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது.
அப்போது பேசிய படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, ஆதி பகவன் ஷூட்டிங்கில் அமீர் எப்படியெல்லாம் தன்னை பிழிந்து எடுத்தார் என்பதை விளக்கினார். அவர் பேசுகையில், பாங்காக்கில் கிட்டத்தட்ட 60நாட்கள் ஷூட்டிங். அதில் 12 நாட்கள் ராத்திரி பகல் பாராமல் நடித்தேன். கை, காலில் பலத்த அடி, ஓய்வு எடுக்ககூட நேரமில்லாத சூழல். இதை கேள்விப்பட்ட என் குடும்பத்தார் கதறி அழுதே விட்டனர். என்ன மனுஷன் இப்படி வேலை வாங்குகிறான் என்று அமீரை திட்ட ஆரம்பித்துவிட்டனர். எனக்கோ அமீரை கழுத்தை நெரித்து கொலை செய்ய வேண்டும் போல தோன்றியது. அந்தளவிற்கு அவர் மீது எனக்கு கோபம். ஷூட்டிங்கை எப்படா முடித்து விடுவார் என்று ஒவ்வொரு நாளும் தோன்றியது. ஆனால் இப்போ படத்தை பார்க்கும் போது அந்த வலி எல்லாம் மறந்து, படம் நல்லா வந்திருக்குனு தோணுது என்று சொல்லி மேடையில் அமர்ந்தார்.
ரவியை தொடர்ந்து அமீர் பேசும்போது, என்னால் நடிகர்களுடன் டீ சாப்பிட்டு கொண்டு, அரட்டை அடித்து கொண்டு ஜாலியா ஸ்பாட்டில் வேலை பார்க்க முடியாது. கடுமையாக உழைக்கணும் என்று விரும்புவேன். அன்று எடுக்க வேண்டிய ஷாட்டுகள் எல்லாம் நன்றாக வந்தால் தான் அமைதியாவேன். ஆதிபகவன் படத்திற்காக ஜெயம் ரவி ரொம்பவே கஷ்டப்பட்டார். கம்பி மேல் வைத்து ஒரு ஷாட் எடுத்தேன். கிட்டத்தட்ட அது உடையும் அளவிற்கு பல டேக் ஆனாலும், அதை அமைதியா வந்து நடித்து கொடுப்பார் ரவி என்று அமீர் சொன்னதும், ஜெயம் ரவியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. அவரால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இறுதியில் அமீர் சொன்ன இன்னொரு விஷயமும் ஹைலைட்டாக அமைந்தது. அது, என்னோட வேலை பார்த்தவர்களில் எந்த நடிகருடன் மீண்டும் படம் பண்ணுவேன் என்று கேட்டால் நிச்சயம் அது ஜெயம் ரவியாகத்தான் இருக்கும் என்று அமீர் சொல்லி முடித்ததும், ரவியின் கண்கள் அப்படியே அமீரை நோக்கி சிரித்ததை நம்மால் உணர முடிந்தது.