‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கமல்ஹாசன் சென்னையில் இரண்டு நாட்கள் நடத்திய இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பொழுதுபோக்கு பிரிவின் கருத்தரங்கில் இந்த ஆண்டு சினிமா தொழிலாளர்கள் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில் அமீர் கலந்து கொண்டார். மாநாடு குறித்து அவர் கூறியதாவது:
பிக்கி மாநாட்டில் நான் வழக்கமாக இயக்குனராக கலந்து கொள்வேன். இந்த ஆண்டு திரைப்பட தொழிலாளர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டேன். இந்த ஆண்டு தொழிலாளர்கள் பிரச்னை பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் 23 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையானவர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. ஒருவரை பார்த்து ஒருவர் கற்றுக் கொண்டு தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவது குறித்து பேசப்பட்டது. சமையல் செய்பவர்கள் முதல் கேமரா உதவியாளர் வரை தங்கள் தொழிலை முறைப்படி செய்ய இந்த பயிற்சிகள் உதவும்.
இதற்கான பயிலரங்குகளை இந்த ஆண்டே தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதற்கான நிபுணர்களை கமல் சார் ஏற்பாடு செய்து தருவதாக சொல்லியிருக்கிறார். பத்து ஆண்டுகளில் 12 லட்சம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களை தயார்படுத்தி விடலாம் என்று கமல் சார் அறிவித்திருக்கிறார். அவரது அந்த கனவை நிறைவேற்ற பெப்சி உறுதுணையாக இருக்கும். தொழிலாளர்கள் முறையான பயிற்சி பெறும்போது வேலைகள் விரைவாகவும், தரமாகவும் நடக்கும், செலவினங்களும் குறையும்.
என்றார்.
நல்லது நடக்கட்டும்...!