ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம் ராஜா ராணி. இதில் ஆர்யா, நயன்தாரா, ஜோடியாக நடிக்கிறார்கள். அத்லி என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் காட்சியை இயக்கி கமல் துவக்கி வைத்தார். இதுகுறித்து இயக்குனர் முருகதாஸ் கூறியதாவது: நல்ல கதைகளுக்கும், திறமையான அறிமுக இயக்குனர்களுக்கும் எனது நிறுவனம் மூலம் வாய்ப்பளித்து வருகிறேன். எங்கேயும் எப்போதும் வெற்றிக்கு பிறகு எனது பொறுப்பு அதிகரித்திருக்கிறது. அடுத்த தயாரிப்பான வத்திக்குச்சி விரைவில் வெளிவருகிறது. அதன் பிறகு கதைகள் கேட்டு வந்தேன். அதில் அத்லி சொன்ன கதை ரொம்பே பிடித்திருந்தது. பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தார். அதுதான் ராஜா ராணி கதை. ரொமாண்டிக் லவ் ஸ்டோரி.
நான் தயாரிக்கும் படங்கள் மீடியம் பட்ஜெட்டில்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்தேன். கதை கேட்கும்போதே இந்தக் கதைக்கு ஆர்யா, நயன்தாராதான் மிகச் சரி என்று முடிவு செய்தேன். இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இன்னொரு முக்கிய கேரக்டரில் ஜெய் நடிக்கிறார். சத்யராஜ், சத்யன் காமெடி நண்பன் படத்தில் ஒர்க் அவுட் ஆனது. அதனால் இதிலும் அவர்களை நடிக்க வைக்கிறேன். சந்தானம், ஆர்யா காமெடி இன்னொரு பக்கம் இருக்கும்.
நான் கமலின் தீவிர ரசிகன். அவரிடம் உதவியாளராக பணியாற்ற வேண்டும் என்ற விரும்பினேன் அது நடக்கவில்லை. இந்தப் படத்தை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரே வந்து முதல் காட்சியை இயக்கினார். நான் கிளாப் அடித்து என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். எனது நிறுவனத்திலிருந்து தொடர்ந்து நல்ல படங்கள் வெளிவரும்.
ஆர்யா, நயன்தாரா... ஜோடி மறுபடியும் முதல்ல இருந்தா...?