இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவுக்கு தமிழில் இருந்து ஒரே படமாக வாகை சூடவா தேர்வாகியுள்ளது. சற்குணம் இயக்கத்தில், விமல், இனியா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் வாகை சூடவா. இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தேசிய விருது, நார்வே திரைப்பட விருதுகள் என்று விருதுகளை வாரி குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியன் பனோரமாவுக்கு தமிழ், மலையாளம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 20 படங்கள் தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் வாகை சூடவா என்பது பெருமையான விஷயம். இதுகுறித்து வாகை சூடவா படத்தின் டைரக்டர் சற்குணம் கூறுகையில், இந்தியாவில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக இந்தியன் பனோரமாவுக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. இந்தப்பிரிவில் படங்கள் தேர்வாவது சாதாரண விஷயம் அல்ல. அப்படி இருக்கையில், வாகை சூடவா படம் தேர்வாகி இருப்பது மிகப்பெரிய பெருமை என்று கூறியுள்ளார்.