ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு குறைந்த செலவில் பயமுறுத்தும் பேய் படங்களின் தயாரிப்பு அதிகரித்து உள்ளது. அந்த வரிசையில் தயாராகும் படம் யாரது. சூர்யா விஷூவல் கம்யூனிகேஷன் சார்பில் ஏ.சுந்தர்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஏ.சம்பத்குமார் இயக்குகிறார். வருண், உண்ணி கிருஷ்ணன் ஹீரோவா நடிக்கிறார்கள், சவுந்தர்யா, மீனா என்ற இரண்டு ஹீரோயின்கள்.
ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனிமலைக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு வேறு ஊரிலிருந்து சுற்றுலா வரும் சில இளைஞர்கள் சேர்ந்து அவளை கற்பழித்து கொன்று விடுகிறார்கள். அதன் பிறகு எதுமே நடக்காத மாதிரி தொடர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். இறந்தவர் ஆவியாக வந்து அவர்கள் செல்லும் இடங்களுக்கு தொடர்ந்து சென்று எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை. கேரளா, ஆந்திரா, அசாம், மனாலி, இமாச்சல பிரதேசம் என்று இந்தியாவின் அழகான பிரதேசங்களில் படம் பிடித்திருக்கிறார்கள்.
இப்படி பமுறுத்தி பயமுறுத்தியே ரணகளமாக்குறாங்களே...