பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சில நடிகைகளை மாதிரி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம் என்று தடாலடியாக இறங்காதவர் அனுஷ்கா. வருடத்துக்கு 4 படம் நடிச்சாலும் போதும். ஆனா பெரிய கம்பெனி. பெரிய டைரக்டர் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். காரணம், பேமண்டுதான். பெரிய கம்பெனிகள் என்கிறபட்சத்தில் கேட்ட சம்பளம் சிங்கிள் பேமண்டாக கிடைக்கும் என்பதினால்தான்.
ஆனால் அனுஷ்காவின் இந்த உள்விவகாரம் தெரியாமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா அணுகியவர்கள், மிக குறைவான சம்பளம தரவே முன்வந்தார்களாம். அதோடு, தலயோட படத்தில் நடிக்க சான்ஸ் கொடுப்பதே பெரிய விஷயம் என்று வார்த்தை விட்டார்களாம். இதனால் கடுப்பான அனுஷ்கா, தலையோ வாலோ எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. எனக்கு தேவை நான் கேட்கிற பேமண்ட். முடிஞ்சா வெட்டுங்க. இல்லை ஏறக்கட்டுங்க என்று எகிறி பேசியிருக்கிறார். என்றாலும் அனுஷ்காவை கண்டிப்பாக இந்த கதைக்கு வேண்டும் என்று இயக்குனர் பிடிவாதமாக இருப்பதால், தொடர்ந்து தயாரிப்புதரப்பு, அனுஷ்காவிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. இன்னும் பேரம் படிந்த மாதிரி தெரியவில்லை.