ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நல்ல படங்கள் மக்களை போய்ச் சேர நிறைய தடைகள் இருக்கின்றன, என்று டைரக்டர் தங்கர்பச்சான் கூறினார். அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான படங்களை இயக்கிய டைரக்டர் தங்கர்பச்சான், தற்போது அம்மாவின் கைப்பேசி என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். தணிக்கை குழுவினர் ஒரு காட்சிக்கு கூட ஆட்சேபனை தெரிவிக்காததுடன் இந்த படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. புதிய படம் குறித்து தங்கர்பச்சான் அளித்துள்ள பேட்டியில், என்னைப் போன்ற டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மக்களை மட்டுமே நம்பி படம் எடுக்கிறார்கள். ஆனால் எங்கள் படங்கள் மக்களை போய்ச் சேருவதற்கு நிறைய தடைகள் இருக்கின்றன. பண்டிகை காலங்களில் மட்டுமே பெரிய முதலீட்டு படங்கள், பெரிய நடிகர்களின் படங்களை திரையிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. கதையையும், மக்களையும் மட்டுமே நம்பி படம் எடுக்கும் என்னைப் போன்றவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. யாரிடம் சென்று இதை முறையிடுவது? என் போன்ற நூற்றுக்கணக்கான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய படங்களுக்கு 500 தியேட்டர்கள் கொடுத்தால், எங்கள் படங்களுக்கு 100 தியேட்டர்களாவது கொடுங்கள், என்று கூறியுள்ளார்.