தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்று விட்டால், அதில் பங்குபெற்ற கலைஞர்கள் அடுத்தடுத்து படங்களிலும் இணைந்து பணியாற்றுவது நடைமுறையாகி விட்டது. அந்த வரிசையில், சுந்தரபாண்டியன் படத்தில் தன்னுடன் நடித்த லட்சுமிமேனனை தனது அடுத்த படத்துக்கும் நாயகியாக்கியுள்ளார் சசிகுமார்.
சுந்தரபாண்டியன் படத்தைப்போலவே இந்த படத்தையும் அவரே தயாரிக்கிறாராம். அதேபோல் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவரான முத்தையா என்பவர் இந்த புதிய படத்தை இயக்குகிறார். கிட்டத்தட்ட இதுவும் கிராமத்து சாயல் கதை என்பதால், கதையை கேட்ட மறுகணமே இந்த படத்திலும் எனது ஜோடி லட்சுமிமேனன்தான் என்று முடிவு செய்து விட்டராம் சசிகுமார். இதற்கு காரணம் சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்லாது, சில காட்சிகளில் யதார்த்தமாக நடித்து அனைவரையும் அசத்தினாராம் லட்சுமி. அதனால்தான் அவரது அசத்தலான நடிப்பு இந்த படத்துக்கும் அவசியம் தேவை என்று உடனடியாக லட்சுமிமேனனை கேரளாவில் இருந்து சென்னைக்கு வரவைத்து அட்வான்சை கொடுத்து அனுப்பியிருககிறார் சசிகுமார்.