600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மணிரத்னத்தின் கடல் படப்பிடிப்பு கடற்கரையோர கிராமங்களில் நடந்ததால், அந்த கொளுத்தும் வெயிலும், உப்புக்காற்றும் சமந்தாவின் மெல்லியை தோலை பதம் பார்த்துவிட்டன. ஆங்காங்கே அலர்ஜியால் ரத்தம் கட்டிப்போக அலறிவிட்டார் சமந்தா. மருத்துவ பரிசோதனையில், தோல் அலர்ஜி நோய், உடனே சிகிச்சை பெற வேண்டும் என்று கண்டிசனாக சொன்னதால், கடல் மற்றும் ஐ படங்களில் இருந்தே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
அதனால் இரண்டு மாதங்களாக தீவிரமான சிகிச்சை எடுத்து விட்டு இப்போது மீண்டும் சினிமா களத்தில் குதித்திருக்கிறார் சமந்தா. ஆனால் இப்போது அவரை சந்தித்து கதை சொல்லச் செல்கிறவர்கள், கதை சொல்வதைவிட அவரது உடம்பை துருவி துருவி பார்க்கிறார்களாம். பார்க்கக்கூடாத இடத்தைப்பார்த்து விட்டு சமந்தாவை நெளிய வைக்கும் அளவுக்கு கேள்வி கேட்கிறார்களாம். இதனால் இப்போது கதை சொல்ல வேண்டும் என்று இயக்குனர்கள் போன் செய்தால், முடிந்தவரை போனிலேயே கேட்கிறேன் என்கிறாராம் சமந்தா. அதோடு, தனது உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை. என்ற மருத்துவ சான்றிதழையும் அவர்களுக்கு மெயில் பண்ணி விடுகிறாராம் நடிகை.