சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
தவறுகளை தட்டிக்கேட்பதற்காக அரசியல்வாதி ஆகலாம் என நினைத்தாக டைரக்டர் முருகதாஸ் கூறினார். திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நான் இந்த கல்லூரியில்தான் படித்தேன். படிக்கும்போது மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். ஆனால் 3 ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றேன். நான் பார்த்த முதல் நகரம் திருச்சி. கல்லூரி படிப்பு காலத்தில் எனக்குள் இருந்த கூச்சம் எங்கே போனது என்று தெரியவில்லை. தவறுகளை தட்டிக்கேட்கும் மனநிலை எனக்குள் உருவானது. தவறுகளை எதிர்த்து எப்படி போராடுவது என்று தெரியாத நிலை. எனவே ஒரு நக்சலைட்டாகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ ஆகலாமா? என்று கூட நினைத்தேன்.
2-ம் உலகப்போரை நிறுத்தியது, அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன். எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்து வருகிறேன். எனது ரமணா படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். ஊதியத்துக்கு பணி செய்வதை மட்டுமே லட்சியமாக கொள்ளாமல் சமுதாய கடமைகளையும் ஆற்ற முன்வர வேண்டும், என்றார்.
நீங்கள் சமுதாய சீர்திருத்த படங்களுக்கு காசு வாங்காமல் தான் இயக்குகிறீர்களா? மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும், பேசிவிடுவீர்களா? இவர் படம் எடுக்க இல்லை என்றால் சமுதாயமே கெட்டு சீரழிந்துவிடும், இந்த லச்சனத்தில் இவர் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றவர், மன்னிப்பு எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்று வசனம் எழுதிவிட்டு, என் சமுதாய மக்களிடம் தன் தரங்கெட்ட படத்திற்காக மன்னிப்பு கேட்கிறார், இதை விட கேவலம் ஒன்றும் இல்லை முருகதாஸ், படம் எடுப்பதிர்க்கு முன்பு உருப்படியான(உண்மையான) வரலாறை தெரிந்துகொண்டு, யாருடைய மனமும் புண்படாதபடி படம் எடுங்கள்.