பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அவன் இவன் படத்தில் நடித்தபோதெல்லாம் தமிழ் சினிமாவையே முழுசாக நம்பியிருந்தார் விஷால். ஆனால் பிரபுதேவா இயக்கத்தில் நடித்த வெடி படத்தின் தோல்வியை அவரை தடுமாற வைத்து விட்டது. கூடவே படம் சொந்த தயாரிப்பு என்பதால் படத்தை ரிலீஸ் பண்ணுவதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள். என்றாலும் அதே படத்தை தனது தாய்மொழியான தெலுங்கிலும் ரிலீஸ் பண்ணி ஓரளவு போட்ட பணத்தை கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து இப்போது தெலுங்கிலும் நிலையாக காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் விஷால்.
அதன்காரணமாக, தான் தமிழில் நடிக்கும் படங்களை தானே தெலுங்கில் ரிலீஸ் பண்ணும் முடிவில் இருக்கிறார். இதனால் தான் நடிக்கும் படங்களின் தெலுங்கு ரைட்ஸை முன்கூட்டியே பேசி வாங்கி விடுகிறார். இப்படி வாங்கும் படங்களை ஆந்திராவில் பெரிய அளவில் ஓடவைக்க வேண்டும் என்பதற்காக, விஷாலின் அண்ணனான விக்ரம், ஆந்திராவில் உள்ள முக்கிய நகரங்களில் விளம்பர பலகைகளை வைத்துள்ளாராம். விஷால் நடித்த ஒவ்வொரு படமும் திரைக்கு வரும்போதும் திருவிழாக்கோலம்போல் விளம்பரங்களை அள்ளி விடப்போகிறார்களாம். மற்ற நேரங்களில் இந்த பலகைகளில் மற்றவர்களின் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையாக வாடகை வசூலிக்கப்போகிறார்களாம். இப்படியாக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப்போகிறார்கள் விஷால் குழுமம்.