விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
"தவமாய் தவமிருந்து படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமான பத்மப்ரியா, இப்போது, சத்தம் இல்லாமல் இருக்கிறார். தமிழ் திரையுலகை அவர் மறந்தே விட்டாரோ என, நினைக்கும் அளவுக்கு, பெரிய, "கேப் விட்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும், "தங்கமீன்கள் என்ற படத்தில் நடிக்கிறார் பத்மப்ரியா. இதில், "கற்றது தமிழ் பட இயக்குனர் ராம், கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார். நடிகை ரோகினி, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தந்தைக்கும், மகளுக்குமான உறவை, புதிய கோணத்தில் காட்டும் இந்தத் திரைப்படம் தனக்கு, "இரண்டாவது இன்னிங்சை துவங்கி வைக்கும் என்றும்; இதில், உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தை தான் ஏற்றுள்ளதாகவும் கூறுகிறார், பத்மப்ரியா.