தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் படம் படத்தை இயக்கிய டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்துக்கு, ரெண்டாவது படம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த படத்தில் விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சேத்தன், சுரேஷ், ஆர்.எஸ்.சிவாஜி, சஞ்சனாசிங் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகிய இருவரும் பாடல்களை எழுத, கண்ணன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், சி.எஸ்.அமுதன். ஸ்கிரீன் கிராப்ட்ஸ் சார்பில் தரணி தயாரிக்கிறார். படம் குறித்து டைரக்டர் அமுதன் கூறும்போது, தமிழ் படம் படத்தில் ரசித்த விஷயங்கள், இந்த படத்தில் இரண்டு மடங்கு இருக்கும். அந்த படத்தில் இருந்தது போல் கிண்டல் இருக்காது. ரெண்டாவது படம் காதலும், நகைச்சுவையும் கலந்த யதார்த்தமான படமாக இருக்கும், என்றார்.