இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
முன்பெல்லாம் அம்மாவின் துணையோடு படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருந்த இனியா இப்போது அப்பாவோடு வந்து கொண்டிருக்கிறார். என்னாச்சு அம்மாவுக்கு என்றால் கண்கலங்க பேசுகிறார். "திடீர்னு ஒரு நாள் அம்மாவுக்கு வைரஸ் பீவர் வந்துச்சு. சாதாரண காய்ச்சல்னு பக்கத்துல இருக்குற டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டாங்க. ஆனா இரண்டு மூணு நாளா காய்ச்சல் குறையவே இல்லை. பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காண்பிச்சப்போ வைரஸ் பீவர்னு சொன்னாங்க. ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே இருந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டாங்க. என்னைய பக்கத்துல இருந்து கவனிச்ச அம்மாவ நான் பக்கத்துல இருந்து கவனிக்க வேண்டியதாயிடுச்சு (கண்கலங்குகிறார்). குருவாயூரப்பன் புண்ணியத்துல அம்மா குணமாயிட்டாங்க. இருந்தாலும் பழைய அம்மாவா திரும்பி வர்றதுக்கு கொஞ்ச நாளாகும். அதனாலதான் அப்பாவை துணைக்கு கூட்டிட்டு வர்றேன். அப்பா வர்றது ரொம்ப பாதுகாப்பாத்தான் இருக்கு. ஆனா அம்மாகிட்ட ஷேர் பண்ணிக்கிற விஷயங்களை அப்பாகிட்ட ஷேர் பண்ணிக்க முடியாதே... என்னோட டிரஸ், மேக்அப், நடிப்பு எல்லாத்தையும் அவுங்க பாத்துப்பாங்க. ஒரு நடிகையாகணும்னு ஆசைப்பட்டு தோத்து போனவங்க எங்க அம்மா. அதனால என்னை பெரிய நடிகையாக்கி பார்க்கணும்னு நிறைய ஆசை அவுங்களுக்கு. திரும்பவும் என்கூட அம்மா சீக்கிரம் வருவாங்க. அவுங்க கனவை நான் நிறைவேற்றுவேன்" என்கிறார் இனியா.