தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கர் பச்சான் இயக்கும் "அம்மாவின் கைபேசி" படம் முடிந்து வெளிவரத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை எடுக்க பட்ட அவஸ்தைகளை புலம்பித் தள்ளினார் தங்கர். அதன் சுருக்கம் இது.
பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டுன்னு ரெண்டு உலகத் தர படம் கொடுத்தேன். அதுக்குப் பிறகும் எனக்கு யாரும் சான்ஸ் தரலை. தயாரிப்பாளர்களை தேடி தேடி கால்முட்டி தேஞ்சி போச்சு. அஞ்சு வருஷம் வாய்ப்பில்லாம இருந்தேன். சரி நாமே தயாரிக்கலாமுன்னு ஊர்ல இருக்கு தோப்பு துரவுகளை வித்து அம்மாவின் கைபேசிய ஆரம்பிச்சேன். நடிக்க ஆள்தேடிப்போனா அம்புட்டு பேரும் விழுந்தடிச்சு ஓடுறானுவோ. கடைசியில பாக்யராஜ் மகனோட புகைப்படத்த பார்த்துட்டு அவனை கூப்பிட்டேன். அவனும் ஒரு நல்ல கதைய தேடிக்கிட்டிருந்துருக்கான் நடிக்க வந்தான். அடுத்து படத்துல ஒரு அம்மா கேரக்டர் ரொம்ப முக்கியமானது. சில அம்மா நடிகைங்கள கேட்டேன் ஒன்பது பிள்ளைக்கு அம்மாவான்னு ஓடிப்போனாங்க.
தேசிய விருது வாங்கிய ஒரு நடிகை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் கேட்டாங்க. அம்புட்டு வசதி இந்த ஏழைகிட்ட இல்லன்னு சொல்லிட்டேன். இளம் ஹீரோக்களுக்கு அழகான அம்மாவா நடிக்கணுங்றதுதான் சில நடிகைங்களுக்கு ஆசை. சரின்னு பழைய நடிகை ரேவதி வீட்டுல சும்மாதான் இருக்காங்கன்னு கேள்விப்பட்டு அவுங்களை கூட்டிவந்து நடிக்க வச்சேன். இனியாவ வாகைசூடவா படத்துல பார்த்துருக்கேன். அவுங்க நடிப்பு பிடிச்சு நடிக்க வச்சேன். அப்புறம் படத்துல ஒரு வெட்டித்தனமான மகன் கேரக்டர் அதுல நடிக்க பலபேரை கேட்டேன். யாரும் வரலை கடைசியில நானே அதுல நடிச்சிட்டேன். மியூசிக் போட ஆள் தேடினேன் அவுங்க கேக்குற சம்பளத்தை என்னால கொடுக்க முடியாதுன்னு ஏ.ரகுமான்கிட்ட கீ போர்டு வாசிச் ரோஹித் குல்கர்னிய இசை அமைக்க வச்சிட்டேன். இப்படி ஒரு வழியா படத்தை முடிக்கிறதுக்குள்ள உசுரு போயிட்டு உசுரு வந்திருக்கு.
இப்போ படத்தை வெளியிடணும். பாடல் வெளியீட்டு விழாவுக்கே 25 லட்சம் செலவாகிப்போச்சு. இன்னும் தியேட்டர் பிடிக்கணும் அவுங்களுக்கு காசு கொடுக்கணும். கடைசியில அவுங்க நஷ்ட கணக்கு தருவாங்க வாங்கிட்டு வரணும். ஆனா படம் பிரமாதமா வந்திருக்குங்க. கடைசி 3 நிமிஷத்துக்கு முன்னாடி வரைக்கும் படத்தைதோட முடிவை யாரும் கண்டுபிடிக்க முடியாது. படம் முடியுற வரைக்கும் சீட்டு நுனியில உட்கார்ந்து பார்ப்பீங்க. படம் முடிஞ்சதும் இரண்டு நிமிடம் லைட்டை அணைச்சு வையுங்க. அழுவுறவங்க அழுதுட்டு வரட்டும்னு தியேட்டர் காரங்களுக்கு கடிதம் எழுதப்போறேன். என்கிறார் தங்கர்.
வாய்ப்பு கிடைக்காததற்கு "வாய்"தான் காரணமாக இருக்குமோ...