வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வருடத்துக்கு மூன்று படமாவது கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கும் நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். ஆனால் எப்படியோ ஆதிபகவன் படத்தில் இரண்டு வருடத்துக்கு மேல் வகையாக மாட்டிக்கொண்டார். அதன்காரணமாக அவர் நடித்த படம் ரசிகர்களின் பார்வைக்கு வந்து ரொம்ப காலமாகி விட்டது என்கிற நிலை உள்ளது.
இதுபற்றி ஜெயம் ரவி கூறும்போது, இப்போதைய ரசிகர்கள் ரொம்பவே வேகமாக இருக்கிறார்கள். தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் அடிக்கடி திரைக்கு வர வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள். அதனால் அவர்களது வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் குறைந்தது வருடத்துக்கு மூன்று படம் இல்லையென்றாலும் இரண்டு படமாவது திரைக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். அதனால்தான் என் படம் வெளியாகி வருடக்கணக்கில் ஆகி விட்டதால் ரொம்பவே பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மேலும், இனிமேல் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, எந்த இயக்குனரிடமும் வருடக்கணக்கில் சிக்க மாட்டேன். குறைந்து மூன்று, நான்கு மாதங்களில் ஒரு படம் சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துக்கொடுத்து விட்டு அடுத்த படத்தில் இறங்கி விடுவேன் என்கிறார்.