அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இசை பிக்சர்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும், பேரலை எனும் படத்தில் அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறார். புதிய தயாரிப்பு நிறுவனமான இசை பிக்சர்ஸ் முதல் முறையாக பிரம்மாண்டமான பொருட்செலவில் அர்ஜீன் நடிக்கும் ‘பேரலை’ என்ற படத்தை தயாரிக்க களம் இறங்கி உள்ளது. கே. எஸ் அதியமானின் இணை இயக்குனரான ஜி.கே என்ற புதியவர் கதை, திரைக்கதை எழுதி பேரலை படத்தை இயக்குகிறார்.
மணிரத்னத்தின் ‘கடல்’ மற்றும் வனயுத்தம் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் அர்ஜீன் ஜி.கே விடம் கதை கேட்ட மாத்திரத்திலேயே, ‘இது எனக்கான களம். நான் நடிக்கிறேன்’ எனச் சொல்லி ஒரே கால்ஷீட்டை அள்ளிக்கொடுத்துள்ளார். ‘கிருஷ்ணவேனி பஞ்சாலை’ படத்தில் நடித்த ‘குட்டி சினேகா’ நந்தனா இப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக அன்பு - பாலாவும், உடன் நிறைய புதியமுகங்களும் அறிமுகமாக உள்ளனர். ஆனந்த், ஸ்ரீதர், ஆஷஷிக், ராஜ்கமல், தணிகை, அருண், ராம்குமார், பிரேம், கஜேந்திரன், அமீர், ஐஸ்வர்யா மேனன், அனு இவர்களுடன் சஞ்சனாசிங், இயக்குனர் ராஜ்கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படம் பற்றி இயக்குநர் ஜி.கே.கூறும்போது, இருபத்தோராம் நூற்றாண்டின் சமூகநிலையை அப்பட்டமாக சொல்ல இருக்கிறது ‘பேரலை’ இன்றைய கணினி யுகத்தில் இளைஞர்கள் எவ்வாறு தவறான பாதையை நோக்கி இழுக்கப்படுகிறார்கள்இ அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சமூகத்தையும், சுற்றத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் பரபரப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள். ஒரே கதையில், மூன்று கோணங்களில் சம்பவங்கள் அலசப்படும் வித்தியாசமான பாணி இதில் கையாளப்படுவது இதன் சிறப்பம்சம். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜீனின் ரசிகர்களுக்குமான தீனியும் நிச்சயம் படத்தில் இருக்கும் என்கிறார்.
படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவை ‘போர்க்களம்’ மகேந்திரன் கையாள, க. முத்துக்குமார் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக சிவா அலங்கரிக்கிறார். பாடல்கள் அனைத்தையும் யுகபாரதி எழுத உள்ளார். நடனம் அமைக்கிறார் முகமூடி ராதிகா. இசை பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார் இசை.